சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்வு - இன்றைய பங்குச்சந்தை நிலவரம்


சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்வு - இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 254 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 22 ஆயிரத்து 337 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 244 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 48 ஆயிரத்து 489 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

740 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 730 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 22 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 50 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

334 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 168 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 422 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 55 ஆயிரத்து 401 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

கடந்த ஒரு மாதத்திற்குமேல் தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தை இன்று வெகுவாக ஏற்றம் பெற்றுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story