'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்


டிமான்ட்டி காலனி 2 படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல்
x

'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஓ.டி.டி உரிமையை ஜி5 நிறுவனம் வாங்கியுள்ளது.

சென்னை,

அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வம்சம், மவுனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி, டிமான்ட்டி காலனி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தில் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 15-ந் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது.

இந்தநிலையில், 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஒ.டி.டி உரிமையை ஜி5 ஓ.டி.டி நிறுவனம் வாங்கியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Next Story