சிரஞ்சீவியிடம் ஆசி பெற்று தேர்தல் வெற்றியை கொண்டாடிய பவன் கல்யாண்


சிரஞ்சீவியிடம் ஆசி பெற்று தேர்தல் வெற்றியை கொண்டாடிய பவன் கல்யாண்
x
தினத்தந்தி 6 Jun 2024 4:59 PM GMT (Updated: 7 Jun 2024 6:51 AM GMT)

தேர்தலில் வெற்றி பெற்ற பவன் கல்யாண் தனது சகோதரர் சிரஞ்சீவியிடம் ஆசி பெற்று வெற்றியை கொண்டாடினார்.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ந்தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் பவன் கல்யாண் பித்தாபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பவன் கல்யாண் ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்றார். அங்கு தனது சகோதரர் சிரஞ்சீவியின் பாதம் தொட்டு ஆசி பெற்றார். பின்னர் தன் குடும்பத்தினருடன் கேக் வெட்டி தேர்தல் வெற்றியை பவன் கல்யாண் கொண்டாடினார். அப்போது நடிகர்கள் ராம் சரண், வருண் தேஜ் ஆகியோரும் உடன் இருந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story