திருநள்ளாறில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்; கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு


திருநள்ளாறில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்; கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 July 2024 3:14 PM GMT (Updated: 27 July 2024 3:19 PM GMT)

திருநள்ளாறில் சாமி தரிசனம் செய்த நடிகர் அருண் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அருண் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

அவர்களுடன் அருண் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் அவரை கூட்டத்தில் இருந்து மீட்டு சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். பின்னர் வெளியே வரும்போது புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே அருண் விஜய் சிக்கிக் கொண்டார்.

இதனிடையே கூட்டத்தில் சிலர் அருண் விஜய் காலில் மிதித்தால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அருண் விஜய்யை பத்திரமாக மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story