ரெயில் நிலையம் மீது குண்டுவீச்சு  கிழக்கு... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் போர் தீவிரம்: 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்
Daily Thanthi 2022-05-27 00:30:07.0

ரெயில் நிலையம் மீது குண்டுவீச்சு

கிழக்கு உக்ரைனில் போக்ரோவ்ஸ்க் ரெயில் நிலையம் மீது ரஷிய போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின. உக்ரைனின் மின்னணு உளவு மையத்தையும் ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. இந்த தகவலை ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கோனஷெங்கோவ் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் 48 உக்ரைன் படையினர், ஆயுதங்கள், 2 வெடிபொருள் கிடங்குகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் மற்ற இடங்களில் 500-க்கும் மேற்பட்ட இலக்குகளை ரஷியா பீரங்கி தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் படை வீரர்கள் 8 ஆயிரம் பேர் கிழக்கு உக்ரைனில் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீதான போரில் ரஷிய அதிபர் புதின் வெற்றி பெறமாட்டார் என்று ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார். ஏற்கனவே அவர் தந்திரோபாய இலக்குகளில் வெற்றிபெற தவறிவிட்டார் எனவும் தெரிவித்தார். தற்போதைய நிலைமையை உக்ரைன் அங்கீகரிக்கும், மாஸ்கோவின் கோரிக்கைகளை ஏற்கும் என்று ரஷிய அதிபர் மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Next Story