கார்கிவில் 4 பேர் பலி  உக்ரைன் நாட்டின் 2-வது... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் போர் தீவிரம்: 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்
Daily Thanthi 2022-05-26 23:43:15.0

கார்கிவில் 4 பேர் பலி

உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவில் ரஷிய படைகள் குண்டு வீச்சு நடத்தின. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைனில் போர்க்குற்றங்கள் செய்ததாக ரஷிய பீரங்கிப்படையினர் அலெக்சாண்டர் பாபிகின், அலெக்சாண்டர் இவானோவ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்கள் மீது கோர்ட்டு வழக்கு விசாரணையின்போது, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வக்கீல்கள் வாதாடினர்.

குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீதான வழக்கில் 31-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும். நாட்டின் முதல் போர்க்குற்ற வழக்கில் ரஷிய படைவீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.


Next Story