வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து


வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து
x
Daily Thanthi 2024-07-10 06:37:29.0

கொசப்பாளையம் வாக்கு பதிவு மையத்தில் வாக்களிப்பதற்காக காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணிற்கு கத்திக்குத்து விழுந்தது. கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற பெண்ணின் முன்னாள் கணவர் ஏழுமலையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஏழுமலை ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை கத்தியால் குத்தியதாக ஏழுமலை போலீசாரிடம் கூறியுள்ளார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story