சீவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நடத்திய... ... #லைவ் அப்டேட்ஸ்:
Daily Thanthi 2022-05-26 00:02:41.0

சீவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 6 பேர் பலி

இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் நீடிக்கிறது. சீவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்கிய் ஹைடய் தெரிவித்துள்ளார்.

அந்த நகரம் 24 மணி நேரமும் தாக்கி அழிக்கப்படுவதாகவும் அவர் கூறி உள்ளார்.

லைமனில் ரஷிய தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆவ்டடீவ்காவில் ராணுவ நிலைகளும், பிற கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன.

பாக்மட் நகரிலும், பசிகா கிராமத்திலும் ரஷியாவின் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷிய படைகளுக்கு இழப்பு நேரிட்டுள்ளது.


Next Story