இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது: இஸ்ரேல் பிரதமர்... ... 23வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 9 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
x
Daily Thanthi 2023-10-28 21:15:39.0

இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் 23-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. போரில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதனிடையே போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்தத்துக்கான அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் குழுவிற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் எதிரிகளை தோற்கடிப்பதும் நமது இருப்புக்கு உத்தரவாதம் அளிப்பதும் எங்களுக்கு ஒரு முக்கிய குறிக்கோள்” என்று அவர் கூறினார்.


Next Story