காசாவில் இருக்கும் மக்கள் இடம்பெயர மறுத்து கோஷம் ... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
x
Daily Thanthi 2023-10-14 21:05:44.0

காசாவில் இருக்கும் மக்கள் இடம்பெயர மறுத்து கோஷம்

மக்கள் தங்களது உடைமைளை கார்கள், லாரிகள் மற்றும் கழுதை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு தெற்கு காசா நோக்கி சென்று வருகின்றனர். வாகன வசதி இல்லாத பலர் நடைபயணமாகவே தெற்கு காசாவுக்கு செல்கின்றனர்.

மக்கள் குடும்பம் குடும்பமாக தெற்கு காசாவை நோக்கி படையெடுத்து வருவதால் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு செல்லும் சாலை முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

அதே சமயம் வடக்கு காசாவில் இருக்கும் மக்கள் பலர் ‘எங்கு சென்றாலும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது; அதற்கு பதிலாக வீடுகளில் இருந்தவாறே இறந்து போகலாம்’ என இடம்பெயர மறுத்து வீதிகளில் கோஷம் எழுப்பி வருவதை காண முடிகிறது.

தாக்குதலில் 70 பேர் பலி

இந்த வெளியேற்றம் காசா குடிமக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதையும், ஹமாஸ் அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது என இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

ஆனால் தெற்கு காசாவுக்குச் செல்லும் சாலையில் பயணித்து கொண்டிருந்த லாரிகள் மற்றும் கார்களை இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசி தகர்த்ததாகவும், இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 70 பேர் பலியானதாகவும் காசா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story