காசாவில் உயிருக்கு பயந்து ஓடும் மக்கள் ... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
x
Daily Thanthi 2023-10-14 20:51:57.0

காசாவில் உயிருக்கு பயந்து ஓடும் மக்கள்

காசாவின் வடக்கு பகுதி போர் மண்டலமாக அறிவித்த இஸ்ரேல் ராணுவம் அங்கு வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்தது.

மக்கள் மொத்தமாக வெளியேறுவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஐ.நா. எச்சரித்தது. அதேபோல் இதை இஸ்ரேலில் உளவியல் போர் என விமர்சித்த ஹமாஸ் அமைப்பு மக்களை வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொண்டது.

எனினும் இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என்கிற அச்சத்தால் வடக்கு காசா மக்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.


Next Story