4.23 லட்சம் மக்கள் வெளியேறினர்  பாலஸ்தீனத்தின்... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
x
Daily Thanthi 2023-10-14 20:36:15.0

4.23 லட்சம் மக்கள் வெளியேறினர்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 7-ந்தேதி போர் வெடித்தது.

அப்போது முதல் இஸ்ரேல் ராணுவம் காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இதில் காசா நகரம் பேரழிவை சந்தித்து வருகிறது.

ஒருபுறம் போர் விமானங்கள் குண்டு மழை பொழிய, மறுபுறம் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் காசா மக்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

ஏற்கனவே உயிருக்கு பயந்து சுமார் 4.23 லட்சம் மக்கள் காசாவைவிட்டு வெளியேறி பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் ஐ.நா. ஏற்படுத்தியுள்ள முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


Next Story