நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ.... ... மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை.. சிக்கலில் நடிகர்கள்
x
Daily Thanthi 2024-08-29 12:38:43.0

நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. முகேஷ் மீது மராடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை கைது செய்வதற்கு செப்டம்பர் 3ம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, முதல் மந்திரி பினராஜி விஜயனை தொடர்புகொண்ட முகேஷ், தன் மீதான புகார் மற்றும் வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார். 

தன் மீது குற்றச்சாட்டு கூறிய நடிகை, ஏற்கனவே பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவரின் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் முகேஷ் கூறி உள்ளார். அந்த நடிகை தனக்கு எதிராக செய்த சதியை நிரூபிக்க, வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்க உள்ளதாகவும் முதல்-மந்திரியிடம் தெரிவித்தார்.


Next Story