திமுக பவள விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி.. பிளவை ஏற்படுத்த முடியாது - பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
Daily Thanthi 2024-09-28 15:43:58.0

திமுக பவள விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது;

“அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அவர் உருவாக்கிய இயக்கத்தின் பவள விழாவை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன். இது திமுகவிற்கும், அண்ணாவிற்கும் கிடைத்துள்ள பெருமை. அண்ணா வழியில் தமிழ்நாட்டை வழிநடத்தியவர் கலைஞர். தி.மு.க. என்ற மூன்றெழுத்தில் உயிர் அடங்கியுள்ளது.

தமிழகத்தில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் இந்தியா கூட்டணி உருவானது. சில கூட்டணி தேர்தல் சமயத்தில் மட்டும்தானுள்ளது. தேர்தல் முடிந்தால் கூட்டணியே முடிந்துப்போய் விடுகிறது. ஆனால் திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது. திமுக கூட்டணியில் மோதல் வராதா? பகைமையை வளர்க்க முடியாதா என சிலர் நினைக்கின்றனர். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த சிலர் அவதூறு பரப்பி விஷம வேலைகளை செய்தனர். பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம். திமுக கூட்டணியில் மோதல் வராது. திமுக கூட்டணியில் வெற்றியை கண்டு எதிரிகளுக்கு பொறாமை.

இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை. நாடாளுமன்ற தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலை கூட 7 கட்டங்களாக நடத்தி முடித்தனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மாநிலங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்.

திமுக கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறது. அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். மாநில சுயாட்சியை மீட்டெடுக்க உறுதியேற்போம்.”

இவ்வாறு அவர் பேசினார்.  


Next Story