மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால்... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்
x
Daily Thanthi 2024-08-16 07:55:31.0

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணிநேரத்திற்குள் எப்.ஐ.ஆர். - மத்திய அரசு உத்தரவு

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் 6 மணிநேரத்திற்குள் எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்தும் மருத்துவ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   


Next Story