இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்: கொண்டாடிய ஈரான்... ... இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்
x
Daily Thanthi 2024-10-01 23:22:07.0

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்: கொண்டாடிய ஈரான் மக்கள்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 181 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில் அவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஏவுகணை தாக்குதலில் பள்ளிக்கட்டிடம் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ஈரான் மக்கள் கொண்டாடினர். தலைநகர் தெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன் திரண்ட ஈரானியர்கள் ஈரான், ஹிஸ்புல்லா கொடிகளை ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story