மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 05:54:51.0

மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் - பிரதமர் மோடி

ஜி20 உச்சிமாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். அவர் கூறுகையில், ஜி20 உச்சிமாநாட்டை நாம் தொடங்குவதற்கு முன் மொராக்கோ நாட்டில் நடந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மொராக்கோவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’ என்றார்.

மொராக்கோ நாட்டில் இன்று நடந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story