17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி - மக்களவையில் அமித்ஷா பேச்சு


17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி - மக்களவையில் அமித்ஷா பேச்சு
x
Daily Thanthi 2023-08-09 12:49:35.0

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாத்தில் உள்துறை மந்திரி அமிஷா பேசியதாவது:-

நரேந்திர மோடி பிரதமரான பிறகே கோடிக்கணக்கான ஏழை மக்கள் வளர்ச்சியை கண்டனர். நாட்டு மக்களுக்காக ஒரு நாளைக்கு 17 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார். ஒருநாள் கூட விடுமுறையின்றி, ஓய்வின்றி உழைப்பதால் மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

காங்கிரசை போல் ஊழல் செய்யாமல், மக்களின் மானியத்தொகையை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம். கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தவறான பரப்புரை செய்தவர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ். கொரோனா வைரஸில் இருந்து 130 கோடி இந்தியர்களை மோடி அரசு காப்பாற்றியது.

2014ம் ஆண்டு முதல் வளர்சிக்கான இந்தியாவை நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது. சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக, வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ். நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மக்களுக்கு அனைத்தும் தெரியும் என்றார்.


Next Story