தவெக மாநாட்டுக்கு சென்ற இளைஞர் காயம்


தவெக மாநாட்டுக்கு சென்ற  இளைஞர் காயம்
x
Daily Thanthi 2024-10-27 04:48:53.0
t-max-icont-min-icon

தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரெயிலில் சென்றவர்கள் மாநாட்டு பந்தலை பார்த்து பலர் ஆர்வமிகுதியில் கீழே குதித்து உள்ளனர். ரெயிலில் இருந்து குதித்தபோது தவறி விழுந்த நிதிஷ் குமார் (வயது 21) என்ற இளைஞர் தீவிர காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக மாநாட்டிற்காக சென்ற இளைஞர் சென்னை தேனாம்பேட்டையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தவெக மாநாட்டிற்கு சென்றவர்களின் வாகனம் தாம்பரம் அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story