நிலச்சரிவு உயிரிழப்பு 405ஆக உயர்வு


நிலச்சரிவு உயிரிழப்பு 405ஆக உயர்வு
x
Daily Thanthi 2024-08-05 12:18:07.0

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 405 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாடு நிலச்சரிவால் உயிரிழந்தோரின் உடல்கள் நிலம்பூர், சாலியாறு பகுதியில் மீட்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட உடல்களுக்கு டின்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அழுகிய நிலையில் மீட்கப்படும் உடல்கள், பாகங்களை நிலம்பூர் பகுதியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 224 சடலங்களும் 181 உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத 27 பேரின் உடல்கள், 153 உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டன. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 36 உடல்கள் புத்துமலை அருகே ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டன. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 256 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


Next Story