இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் - ராணுவ தளபதி வக்கார் பேச்சு


இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் - ராணுவ தளபதி வக்கார் பேச்சு
x
Daily Thanthi 2024-08-05 10:23:32.0

பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ராணுவ தளபதி வக்கார் மக்களிடையே பேசியதாவது:-

பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். நாட்டில் சட்டம் ஒழுங்கை ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. மாணவர்கள், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாட்டில் அவசர நிலை மற்றும் ஊரடங்கு தேவையில்லை. இன்றிரவுக்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ய அவசியம் ஏற்படவில்லை. கலவரங்களால் பலரும் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம். வங்காள தேசத்தில் இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் என்றார்.


Next Story