வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை... ... கேரளாவில் பயங்கர  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை  123 ஆக உயர்வு -  இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
x
Daily Thanthi 2024-07-30 16:06:20.0

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123ஆக உயர்வு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி 123 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புதையுண்ட 125-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 98 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே முண்டகை, சூரல் மலை, மேப்பாடியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இரவிலும் மீட்புப் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story