கலிபோர்னியா,  ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15... ... புதிதாக 4 ஐபோன்கள் மற்றும் 2 வாட்ச்சுகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்..!!
x
Daily Thanthi 2023-09-12 17:49:26.0

கலிபோர்னியா,

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இன்று வெளியிட உள்ளது. இந்தியாவின் முதன்மை ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் செப். 12-ல் வெளியாகும் என கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி இன்று (செப். 12) ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வை குபெர்டினோவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் தொடங்கி உள்ளது. இந்நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கியது.

இந்நிகழ்வில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவையும் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சிரீஸ் 9 புதிய எஸ்9 சிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எஸ் 9 சிப் ஆன்போர்டு 18 மணிநேர பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. புதிய சிப் சிறந்த சுகாதார கண்காணிப்பு அம்சங்களையும் உறுதியளிக்கிறது. கூடுதலாக, வாட்ச்ஓஎஸ் 10 பெட்டிக்கு வெளியே அனுப்பப்படும். மேம்படுத்தப்பட்ட பைண்ட் மை அம்சம் மற்றும் ஹோம் பாட் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களுடனான இணைப்பிற்காக புதிய U2 சிப் (அல்ட்ராவைடு) சேர்ப்பதையும் ஆப்பிள் உறுதி செய்கிறது.


Next Story