அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: கேரளாவில் இன்றும்,... ... கேரளாவில் பயங்கர  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை  123 ஆக உயர்வு -  இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
x
Daily Thanthi 2024-07-30 10:17:14.0

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: கேரளாவில் இன்றும், நாளையும் துக்கம் அனுசரிப்பு

கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 84 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் இன்றும், நாளையும் துக்கம் கடைபிடிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி இன்றும் நாளையும் அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. 


Next Story