இன்றைய ராசிபலன் - 29.01.2025


இன்றைய ராசிபலன் - 29.01.2025
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் தை மாதம் 16-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 09.20 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

திதி: இன்று மாலை 07.21 வரை அமாவாசை பின்பு பிரதமை

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: புனர்பூசம்

ராசிபலன்:-

மேஷம்

வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

ரிஷபம்

எதிர்பாராத பயணங்கள் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசிய செலவினை மட்டும் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். கலைத்துறையினருக்கு காரியத்தடைகள் ஏற்படும். படம் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள். நீண்ட கால கனவு நனவாகும். மாணவர்களுக்கு தேர்வினைப் பற்றிய அச்சம் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கூடுமானவரை கவனமாக இருக்க வேண்டும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

விருச்சிகம்

குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகஸ்தர்களுக்கு தங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உணவில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

மறைமுக அவமானங்களும் வந்து போகும். உடல் நிலை சீராகும். நண்பர்கள் உதவுவர். புதிய தொழில் துவங்குவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். அதை சமாளிக்கும் வழி கிடைக்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். செலவு செய்வதில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மீனம்

வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்


Next Story