'டானா' புயலை கண்காணித்து தகவல்களை வழங்கி வரும் இஸ்ரோவின் 2 செயற்கைக்கோள்கள்

இஸ்ரோவின் 2 செயற்கைக்கோள்கள் 'டானா' புயல் கண்காணிப்பு பணிகளில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Update: 2024-10-24 16:33 GMT

கொல்கத்தா,

வங்கக்கடலில் அதிதீவிர புயலாக நிலவும் டானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் 20-ந்தேதி கடலில் புயல் சின்னம் உருவானது முதல் அதன் மாற்றங்கள், திசை, பாதிப்புகள் மற்றும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை வானிலை ஆய்வு மையத்துக்கு இஸ்ரோ அளித்து வருகிறது.

புவி கண்காணிப்புக்காக செலுத்தப்பட்ட இ.ஓ.எஸ்.-06 மற்றும் இன்சாட்-3 டி.ஆர். ஆகிய செயற்கைக்கோள்கள் 'டானா' புயல் கண்காணிப்பு பணிகளில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த 2 செயற்கைக்கோள்களும் நிகழ்நேர தரவுகளையும், புள்ளி விவரங்களையும் துல்லியமாக வழங்கி வருவதாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்