ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் ஆட்டம் டிரா

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் அணிகள் மோதின.

Update: 2024-02-03 17:18 GMT

image courtesy: East Bengal FC twitter

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் அஜய் சேத்ரி ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலும் கிளெய்டன் சில்வா 55-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மோகன் பகான் அணி சார்பில் அர்மன்டோ ஆட்டத்தின் 17-வது நிமிடத்திலும் திமித்ரி 87-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்