ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சென்னையின் எப்.சி.

இன்று நடைபெறுகின்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடுகின்றன.

Update: 2024-09-14 14:07 GMT

image courtesy: twitter/@ChennaiyinFC

புவனேஸ்வர்,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதன் முதலாவது ஆட்டத்தில் மும்பை சிட்டி - மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதனையடுத்து இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி முதலாவது ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - ஒடிசா அணிகள் மோதின.

இரு அணிகளும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும் சென்னை அணி முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சென்னை தரப்பில் பரூக் சவுத்ரி 2 கோல்களும், டேனியல் சீமா ஒரு கோலும் அடித்தனர்.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்