'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர்; இந்தியா - சிரியா அணிகள் இன்று மோதல்

இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

Update: 2024-09-09 03:49 GMT

Image Courtesy: @IndianFootball

கச்சிபவுலி,

இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மொரீசியஸ், சிரியா அணிகள் கலந்து கொண்டு ஆடி வருகின்றன. இதில் இந்திய அணி, மொரீசியசுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 0-0 என (செப்டம்பர் 3) டிரா கண்டது.

அடுத்து மொரீசியஸ் - சிரியா அணிகளுக்கு இடையிலான 2வது லீக் ஆட்டத்தில் சிரியா 2-0 என்ற கோல் கணக்கில் மொரீசியஸை வீழ்த்தியது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா - சிரியா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்