ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை சிட்டி-ஏடிகே மோகன் பகான் ஆட்டம் டிரா

மும்பை சிட்டி-ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

Update: 2022-11-06 17:10 GMT

image courtesy: Indian Super League twitter

மும்பை,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி சார்பில் லல்லியன்சுவாலா சாங்டே ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலும் ரோஸ்டின் கிரிஃபித்ஸ் ஆட்டத்தின் 71-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மோகன் பகான் அணி சார்பில் ஜோனி கவுகோ ஆட்டத்தின் 47-வது நிமிடத்திலும் கார்ல் மெக்ஹக் ஆட்டத்தின் 88-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்திருந்தன. இதையடுத்து மும்பை சிட்டி-ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்