ஐ.எஸ்.எல் கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் வெற்றி

இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் எப்.சி-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின.

Update: 2022-11-26 16:48 GMT

image courtesy: Indian Super League twitter

கொல்கத்தா,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் எப்.சி-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் பாதியில் ஏடிகே மோகன் பகான் அணி சார்பில் ஹியுகோ ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால் அதன் பிறகு இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.

இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்