ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏடிகே மோகன் பகான்-ஒடிசா எப்.சி ஆட்டம் டிரா

ஏடிகே மோகன் பகான்-ஒடிசா எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

Update: 2022-12-15 18:51 GMT

image courtesy: ATK Mohun Bagan FC twitter

புவனேஸ்வர்,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏடிகே மோகன் பகான்-ஒடிசா எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஏடிகே மோகன் பகான்-ஒடிசா எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்