இறுதிப்போட்டிக்கு முன்னேற போகும் முதல் அணி எது..? கொல்கத்தா - ஐதராபாத் நாளை பலப்பரீட்சை

ஐ.பி.எல். தொடரில் நாளை நடைபெற உள்ள முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Update: 2024-05-20 16:22 GMT

image courtesy:twitter/ @IPL

அகமதாபாத்,

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று நேற்றுடன் முடிவடைந்தது. இதன் முடிவில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று ஓய்வு நாளாகும். பிளே-ஆப் சுற்று நாளை தொடங்குகிறது.

இதன்படி நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் (குவாலிபயர் 1) புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் முழு மூச்சுடன் போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

Tags:    

மேலும் செய்திகள்