முதலாவது டெஸ்ட்: அஸ்வின் - ஜடேஜா சிறப்பான பார்ட்னர்ஷிப்... சரிவிலிருந்து மீண்ட இந்தியா

அஸ்வின் 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

Update: 2024-09-19 11:50 GMT

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டகாரரான ரோகித் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய கில் 8 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இருவரையும் ஹசன் மக்மூத் காலி செய்தார். பின்னர் வந்த விராட் கோலியும் தாக்குப்பிடிக்கவில்லை. 6 ரன்களில் ஹசன் மக்மூத் பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்தார்.

இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஜெய்ஸ்வால் - பண்ட் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியை ஒரளவு சரிவிலிருந்து மீட்டனர். ரிஷப் பண்ட் தனது பங்குக்கு 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கே.எல். ராகுல் 16 ரன்களில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்களில் கேட்ச் ஆனார்.

பின்னர் ஆல் ரவுண்டர்களான அஸ்வின் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். இருவரும் பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடினர். இதனால் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்தது. அபாரமாக விளையாடிய அஸ்வின் சதமடித்து அசத்தினார் மறுமுனையில் அரைசதம் அடித்த ஜடேஜா 86 ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் சரிவிலிருந்து மீண்ட இந்தியா முதல் நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்