டிஎன்பிஎல்: ரூ.21 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சாய் சுதர்சன்

சாய் சுதர்சனை ரூ.21.60 லட்சத்துக்கு லைகா கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது

Update: 2023-02-23 15:03 GMT

சென்னை,

டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது. சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. ஏ பிரிவு வீரர்களில் ஆர்வம் காட்டாத சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பி பிரிவில் இடம் பெற்ற பாபா அப்ரஜித்தை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

சஞ்சய் யாதவை ரூ. 17.60 லட்சத்துக்கு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏலத்தில் எடுத்தது.சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணிரூ.15.20 லட்சத்துக்குஏலம் எடுத்தது. இது வரை நடந்த ஏலத்தில் அதிக தொகையாகும்.

சாய் சுதர்சனை ரூ.21.60 லட்சத்துக்கு லைகா கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது, முருகன் அஸ்வின் ரூ.6.40 லட்சத்துக்கு மதுரை அணி , சாய் கிஷோரை ரூ. 13 லட்சத்துக்கு திருப்பூர் அணி ஏலத்தில் எடுத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்