டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் அணி

147 ரன்கள் இலக்குடன் கோவை அணி விளையாடி வருகிறது.

Update: 2022-07-06 11:47 GMT

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இன்று  நடைபெறும் 11-வது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் -சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்து அந்த அணி தடுமாறியது சேலம் அணி .அதன்பின்னர் கோபிநாத் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.தொடர்ந்து விளையாடிய அவர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த முருகன் அஸ்வின் 31 ரன்களும் ,பிரணவ் குமார் 34 ரன்களுக்கு வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 9விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.கோவை அணியில் அபிஷேக் டன்வர் , பாலு சூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 147 ரன்கள் இலக்குடன் கோவை அணி விளையாடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்