டி.என்.பி.எல். கிரிக்கெட் : திருச்சி அணிக்கு 137 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை அணி

இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை -திருச்சி அணிகள் மோதுகின்றன

Update: 2022-07-24 11:30 GMT

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை -திருச்சி அணிகள் மோதுகின்றன .டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் அந்த அணியின் அருண் கார்த்திக் 5 ரன்களில்  ஆட்டமிழந்தார்.பின்னர் பாலசந்தர் அனிருத் ,ஆதித்யா இருவரும் சிறப்பாக விளையாடினர்.அனிருத் 34 ரன்கள் ,ஆதித்யா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த ஜெகதீசன் கௌசிக் 22 ரன்கள் ,சன்னி சந்து 24 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு   136 ரன்கள் எடுத்தது மதுரை அணி.தொடர்ந்து  137ரன்கள் இலக்குடன் திருச்சி அணி விளையாடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்