அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

Update: 2023-08-18 13:53 GMT

டப்ளின்,

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

இந்திய அணி தரப்பில், ரோஹித், கோலி, ஹர்திக் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டாம் தர இந்திய அணியை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வழிநடத்த உள்ளார். முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு ஆபரேஷன் செய்துகொண்ட பும்ரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விபரம்;

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங்(கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர்(வி.கீ), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(வி.கீ), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா(கே), ரவி பிஷ்னோய்

Tags:    

மேலும் செய்திகள்