தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

Update: 2022-09-28 13:06 GMT

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி 20 ஓவர் தொடர் என்பதால் இந்திய வீரர்கள் தங்களை நல்ல நிலையில் தயார்படுத்துவதற்கு இந்த போட்டியை பயன்படுத்திக் கொள்ள தீவிரம் காட்டுவார்கள்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி இதுவரை கைப்பற்றியதில்லை என்பது ஆச்சரியமான உண்மையாகும். இதனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்