ஆகாசபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

ஆகாசபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

Update: 2022-07-06 20:08 GMT

திருவையாறு:

திருவையாறை அடுத்த கடுவெளி கிராமத்தில் ஆகாசபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, காப்பு கட்டுதல், காசி யாத்திரை, ஊஞ்சல் உற்சவம், மாலையிடுதல், திருமாங்கல்யம் உற்சவம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவையாறை அடுத்த கடுவெளி கிராமத்தில் ஆகாசபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி பரிவார தெய்வங்கள் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆகாசபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பிருந்தா தேவி, ஆய்வாளர் குணசுந்தரி, எழுத்தர்கள் பஞ்சநாதன், செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்