தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தை மாத 3-வது வெள்ளியையொட்டி உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவிலின் எதிரே உள்ள மகா மண்டபத்தில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி மாரியம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.