நாட்டுமடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
நாட்டுமடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
வேதாரண்யம் நகரில் உள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தநிலையில் நேற்று நடந்த விழாவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.