வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரில் மேல மறைக்காடர் கோவில் உள்ளது. இங்குள்ள காலபைரவருக்கு வைகாசி மாத சனிக்கிழமையையொட்டி பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ்இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.