ஆயக்காரன்புலம் அழகிய நாதர் கோவில் குடமுழுக்கு

ஆயக்காரன்புலம் அழகிய நாதர் கோவில் குடமுழுக்கு

Update: 2022-06-09 14:38 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தியில் அழகியநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து நான்குகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கடம்புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமையன், பானுமதி சுப்பிரமணியம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்