துளசிச் செடி

ஒவ்வொருவர் வீட்டிலும் துளசிச் செடி இருப்பது அவசியம்.

Update: 2022-03-22 08:58 GMT
பல மருத்துவ குணங்கள் நிரம்பிய துளசிச் செடி, மகாவிஷ்ணுவிற்கு பிடித்தமான ஒன்றாகும்.

துளசியில் இரண்டு வகை உண்டு. அதில் கொஞ்சம் கருப்பாக இருக்கும் துளசியை ‘கிருஷ்ண துளசி’ என்பார்கள். இதனை வீட்டில் இரட்டைச் செடியாக வளர்ப்பதே நல்லது. துளசியை வீட்டின் முன்பாகவோ, முற்றத்திலோதான் வளர்க்க வேண்டும்.

துளசிச் செடிக்கு தினமும், கடவுளின் பெயரைச் சொல்லி நீர் தெளித்து, வேரில் அளவோடு நீர் ஊற்ற வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால், எந்த சகுன பாதிப்பும் ஏற்படாது. வீட்டிற்கு திரும்பியபின், கை, கால் கழுவியபின், துளசியை வணங்கும்போது, தீய சக்திகள் எதுவும் நெருங்காது.

ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டில் இருந்து திருமணமாகி புகுந்த வீட்டிற் குச் செல்லும்போது, துளசிச் செடியை வழிபட்டு விடைபெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வருகை தரும்போதெல்லாம், துளசிக்கு நீர் ஊற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வறுமை அகலும், திருமண வாழ்வு சுபிட்சமாக அமையும். சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

மேலும் செய்திகள்