நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 5 பேர் உயிரிழப்பு

எவரெஸ்ட் சிகரத்தை காண்பதற்காக ஹெலிகாப்டரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2023-07-11 06:33 GMT

Photo Credit: manangair.com

காத்மாண்டு

நேபாள நாட்டில் 5 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. சொலுகும்புவில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் நாடான நேபாளத்தில் விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது. 

ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்ற நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேருடம் பலியாகினர். அனைவரும் வெளிநாட்டு பயணிகள் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்