பிரேசில்: பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலி..!

பிரேசிலில் பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-07-22 08:56 GMT

கோப்புப்படம் 

ரியோடி ஜெனிரோ,

பிரேசிலியின் முக்கிய நகரமான ரியோடி-ஜெனிரோவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு குடிசை பகுதியில் கனரக வாகனங்களில் செல்லும் பொருட்கள் திருட்டு போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு வாகனங்களில் விரைந்து சென்று குடிசைக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அவர்கள் குருவியை சுடுவது போல கண்ணில் பட்ட இளைஞர்களை துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் இறந்தனர். மேலும் பலர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்