பாகிஸ்தான்: இஸ்லாமாபாத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவானது.

Update: 2020-12-30 07:05 GMT
கோப்புப்படம்
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. 

இன்று காலை 11.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்