மெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலி

மெக்சிகோவின் வடக்கு பகுதியில் சிகுவாகுவா மாகாணத்தில் உள்ள சியுடாட் கவுத்டெமக் நகரில் இருந்து, துராங்கோ மாகாணத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

Update: 2019-07-24 23:00 GMT

மெக்சிகோ சிட்டி, 

விமானத்தில் உள்ளூர் பாதிரியார் ஒருவர் மற்றும் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர். பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென விமானத்தின் என்ஜின் செயலிழந்தது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோரவிபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்