குழந்தைகளுடன் பெண் மாயம்

குழந்தைகளுடன் பெண் மாயமானார்.

Update: 2023-08-08 19:01 GMT

கொத்தவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 30). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருடன் வேலை செய்த ரேவதியை (27) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கயல்விழி (3), சாதனா (2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சரத்குமார் தனது மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊரான கொத்தவாசல் வந்தார். பின்னர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக அவர் வேலை பார்த்து வருகிறார். குழந்தைகளுடன் ரேவதி கொத்தவாசல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமாரும், ரேவதியும் செல்போனில் பேசியபோது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி ரேவதி தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். மேலும் அவரது வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகனின் மகள்கள் திரிஷா (17), திவ்யா (14) ஆகியோரும் மாயமாகினர். அந்த சிறுமிகளை ரேவதி அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் திண்டுக்கல், திருப்பூர் ஆகிய பகுதிகளில் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து சரத்குமார் மற்றும் முருகன் ஆகியோர் குன்னம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்